sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி கலவர வழக்கில் 4 மாதத்தில் இறுதி அறிக்கை

/

பள்ளி கலவர வழக்கில் 4 மாதத்தில் இறுதி அறிக்கை

பள்ளி கலவர வழக்கில் 4 மாதத்தில் இறுதி அறிக்கை

பள்ளி கலவர வழக்கில் 4 மாதத்தில் இறுதி அறிக்கை


ADDED : ஜூலை 04, 2024 01:33 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில், நான்கு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்துக்கு, பள்ளி நிர்வாகம் தான் காரணம்எனக் கூறி, ஜூலை 17ல் போராட்டம் நடந்தது. பின், திடீரென கலவரமாக மாறியது.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ரவிகுமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விசாரணை முறையாக நடந்து வருகிறது. திருடப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவை மீட்கப்பட்டு உள்ளன. நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நான்கு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி,கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீட்குமாறு, விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

உத்தரவை மீறினால், பள்ளி நிர்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்றும், நீதிபதி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us