ADDED : ஜூலை 11, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் பயணியர் விமானம், கடந்த 6ம் தேதி புறப்பட தயாராக இருந்தது.
அதில் பயணிக்க, சுற்றுலா விசாவில் வந்த இருவரை, சந்தேகத்தில் சோதனை செய்தனர்.
அவர்களின் சூட்கேஸ்களில் ரகசிய அறை அமைத்து, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் வைத்திருந்தது தெரியவந்தது. அதன் இந்திய மதிப்பு, 1.1 கோடி ரூபாய்.
இதையடுத்து, இருவரின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். அவர்களுக்கு, சட்டவிரோத ஹவலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

