sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

50 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்

/

50 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்

50 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்

50 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்


ADDED : மார் 10, 2025 05:38 AM

Google News

ADDED : மார் 10, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், 10 மாவட்டங்களில், 50 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் சமயத்தில், பல்வேறு வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்.

இதைத்தடுக்க, தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நெடுஞ்சாலைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், செயற்கைக்கோள் வாயிலாக கண்காணித்து, காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில், நீலகிரி, திருப்பூர், தேனி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், 50 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.

இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில், அந்தந்த மாவட்ட வனப்பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால், காட்டுத்தீ தொடர்ந்து பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us