sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கீழடியில் யானை தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு

/

கீழடியில் யானை தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு

கீழடியில் யானை தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு

கீழடியில் யானை தந்தத்தாலான ஆட்டக்காய் கண்டெடுப்பு

1


ADDED : ஜூலை 14, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 07:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் தொடங்கியது.

இதுவரை இரு குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பதிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

தற்போது யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டக்காயின் மேற்பகுதி, 1.3 செ.மீ., விட்டமும், கீழ்பகுதி, 1.5 செ.மீ., விட்டமும், 1.3 செ.மீ., உயரமும் கொண்டதாக உள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை ஐந்து ஆட்டக்காய்கள் பல்வேறு கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆட்டக்காய்கள் அனைத்துமே யானை தந்தத்தால் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளன.

இவை அனைத்தும் ஒரே கால கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. ஆட்டக்காயின் காலத்தை அறிய கார்பன் டேட்டிங் முறையை பயன்படுத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

கீழடியில் அகழாய்வு பணிகளில் கீழடி தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us