sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுவனிடம் இருந்து ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

/

சிறுவனிடம் இருந்து ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

சிறுவனிடம் இருந்து ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

சிறுவனிடம் இருந்து ரூ. 1.76 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 18, 2024 12:48 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை, ம.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார் சென்றது. பூட்டை உடைத்து சோதனையிட்டனர். பணம் எதுவும் சிக்கவில்லை.

 திருவண்ணாமலையில் நிதி நிறுவனத்தில், உரிய ஆவணமின்றி பணம் வைத்துள்ளதாக, தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சோதனையிட்டு, உரிய ஆவணமின்றி இருந்த 5 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 ↓சேலம், சீலநாயக்கன்பட்டி, கணபதி நகரில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக பணம் வினியோகித்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பேராசிரியர் சசிகுமார், 43, மற்றும் பாப்பம்பாடியைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்த, 1.76 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

 அரியலுார் மாவட்டம், சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அடைக்கலசாமி, 80, என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 20 லட்சம் ரூபாய் இருந்தது. தன் பேத்தியின் திருமணத்துக்காக வைத்துள்ளதாக அடைக்கலசாமி தெரிவித்ததால், பணம், ஆவணங்கள் என எதையும் எடுக்காமல், அதிகாரிகள் புறப்பட்டனர்.

 ராமநாதபுரம் சின்னக்கடைப்பகுதியில் நகராட்சி 31வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜஹாங்கீர் என்பவரிடம் இருந்து 12,500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்தனர்.

 துாத்துக்குடி முத்தையாபுரம் நேசமணி நகர் பகுதியில் தி.மு.க., இளைஞரணி நிர்வாகி பொன் கற்பகராஜ் என்பவர் வீட்டில், 468 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றி, அவற்றை பதுக்கிய பொன் கற்பகராஜை கைது செய்தனர்.

↓ நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நேற்று காலை, தி.மு.க., ஒன்றிய செயலர் நெல்லை கண்ணன் என்பவரது காரில் இருந்த 8.59 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பிற கட்சியினர் பணம் கொடுப்பதால், தேர்தலை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க., செயலர் அன்பழகன் மற்றும் வேட்பாளர் தமிழ்வேந்தன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் நேற்று, ராஜிவ் சிக்னலில் இருந்து ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us