ADDED : ஜூன் 18, 2024 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சத்துணவு திட்டத்தில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., --- ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளில், இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது.
அன்றைய நாளில், மதிய உணவுக்கான அரிசி, அன்றைய செலவுக்கான பணத்தை, பொங்கலுக்கு பயன்படுத்துவதால், மதிய உணவு வழங்கப்படாமல் இருந்தது; இது, சர்ச்சையானது.
இந்நிலையில், முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளில், மதிய உணவுடன் இனிப்பு பொங்கலும் சேர்த்து வழங்கலாம். இனிப்பு பொங்கலுக்கு மாணவருக்கு, 2 ரூபாய் வீதம், ஆண்டில் ஐந்து நாட்களுக்கு வழங்க, 4.27 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

