sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பார்ட் பார்ட்டாக பஸ்களை பரிசோதிக்க அரசு உத்தரவு

/

பார்ட் பார்ட்டாக பஸ்களை பரிசோதிக்க அரசு உத்தரவு

பார்ட் பார்ட்டாக பஸ்களை பரிசோதிக்க அரசு உத்தரவு

பார்ட் பார்ட்டாக பஸ்களை பரிசோதிக்க அரசு உத்தரவு

37


ADDED : ஏப் 28, 2024 06:39 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:39 AM

37


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த மூன்று நாட்களில் அவற்றை சீரமைக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பஸ்களின் பராமரிப்பு பணி தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

பின், அரசு பஸ்களை ஆய்வு செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்குமாறு, போக்குவரத்து கழகங்களுக்கு, தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தலைமை செயலரின் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் உள்ள 312 பஸ் பணிமனைகளிலும் நேற்று அதிகாலை முதல் பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஐந்து ஆண்டுகளை கடந்துள்ள பஸ்களில் இருக்கைகள், மேற்கூரைகள், ஜன்னல், கதவுகள், படிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.

இன்று காலைக்குள் இந்த ஆய்வுப் பணியை முடித்து, பழுதுள்ள பஸ்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

இதை அறிக்கையாக தயாரித்து, அரசிடம் அளிக்க உள்ளோம். நீண்ட துாரம் செல்லும் வழித்தட பஸ்களை விட, மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இயக்கப்படும் பழைய பஸ்கள் இன்னும் ஓரங்கட்டப்படாமல் உள்ளன.

அன்றாட பராமரிப்பு பணி மேற்கொண்டாலும், சில நேரங்களில் விபத்தில் சிக்குகின்றன.

பராமரிப்பு பணி, உதிரிபொருட்களின் செலவும் அதிகரித்து வருவதால், பழைய பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவது தான் சரியான வழியாக இருக்கும்.

புதிய பஸ்கள், மின்சார பஸ்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என, தலைமை செயலரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us