sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

/

ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி


ADDED : மே 25, 2024 12:07 AM

Google News

ADDED : மே 25, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இவற்றை நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு, ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு, கடைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

இது தவிர, வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு நேரடியாகவும் அனுப்பப்படுகின்றன.

ரேஷன் பொருட்களை கடையில் இறக்கும் போது, ஒரு மூட்டைக்கு 2 - 3 கிலோ வரை குறைவாக இருப்பதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், ஜி.பி.எஸ்., என்ற வாகன நகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவதால், வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்வதை கண்காணிக்க முடியும். வாகனங்கள் செல்லும் நேரமும் அறிய முடியும். அனுமதித்த நேரத்தை விட தாமதமானால், அதற்கான காரணம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஜூன் இறுதிக்குள் கருவிகள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us