ADDED : மே 24, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் நடப்பாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், 26ல் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழைக் காலமும் நெருங்குகிறது.
மாவட்ட நிர்வாகம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து, மழைநீரை பூமிக்குள் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் அபாய நிலைக்கு செல்லாமல் தடுக்க வேண்டியது அவசியம்.