sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரை காற்றின் வேகம் 2 நாட்கள் அதிகரிக்கும்

/

தரை காற்றின் வேகம் 2 நாட்கள் அதிகரிக்கும்

தரை காற்றின் வேகம் 2 நாட்கள் அதிகரிக்கும்

தரை காற்றின் வேகம் 2 நாட்கள் அதிகரிக்கும்


ADDED : ஜூலை 25, 2024 12:36 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'இன்றும், நாளையும் தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடலோரப் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு சூறாவளி காற்று வீசும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதனால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும், லேசான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், 'மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்; சென்னையில் மாலை நேரங்களில் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்றும் நாளையும், தமிழகத்தின் சில இடங்களில், தரைக்காற்றின் வேகம் மணிக்கு, 40 கி.மீ., வரை அதிகரிக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

வங்கக்கடலின் மத்திய பகுதி, வட மேற்கு, தெற்கு, வடக்கு ஆந்திரா, வடக்கு அந்தமான் பகுதிகள், அரபிக்கடலின் மத்திய, தெற்குப் பகுதிகள், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.

எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு, வரும், 28ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us