sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையிலும் 'மகிழ்ச்சி' மையம்

/

கோவையிலும் 'மகிழ்ச்சி' மையம்

கோவையிலும் 'மகிழ்ச்சி' மையம்

கோவையிலும் 'மகிழ்ச்சி' மையம்


ADDED : ஜூன் 03, 2024 05:54 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலீசாரிடம் குறைகளை கேட்ட போது, பணிச்சூழல் காரணமாக, மன அழுத்தம், குடும்பப் பிரச்னை, குடி போதைக்கு அடிமையாதல், தற்கொலை எண்ணம் அதிகமாதல், கோபப்படுதல் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களில் மீள முடியாமல் தவிப்பது தெரியவந்தது.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், 'கவுன்சிலிங்' தரவும், 2021ல், 'காவல் நலவாழ்வு 2.0' என்ற திட்டம் துவங்கப்பட்டது. பின், 2022ல், அந்த திட்டம், 'மகிழ்ச்சி' என, பெயர் மாற்றப்பட்டது. திட்டத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்படும், நிம்ஹான்ஸ் என்ற, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தார் இணைந்துள்ளனர்.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை டாக்டர்கள், மனநல ஆலோசகர்கள், மருத்துவ உளவியலாளர்கள், உதவியாளர்களும் உள்ளனர். அவர்கள், தமிழக காவல் துறையில் மண்டல வாரியாக கவுன்சிலிங் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அதற்கான மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக, மகிழ்ச்சி திட்டத்திற்கான ஆலோசனை மையம் சென்னையிலும், மதுரையிலும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில், மேற்கு மண்டல போலீசாருக்கு, கோவையில் மகிழ்ச்சி திட்டத்திற்கான மையம் திறக்கப்படும்.

- சங்கர் ஜிவால்,தமிழக டி.ஜி.பி.,






      Dinamalar
      Follow us