sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.140 கோடி ஜி.எஸ்.டி., மோசடியை மறைத்து நிலக்கரி ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

/

ரூ.140 கோடி ஜி.எஸ்.டி., மோசடியை மறைத்து நிலக்கரி ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

ரூ.140 கோடி ஜி.எஸ்.டி., மோசடியை மறைத்து நிலக்கரி ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

ரூ.140 கோடி ஜி.எஸ்.டி., மோசடியை மறைத்து நிலக்கரி ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு


ADDED : மார் 08, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 08, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நிலக்கரி சப்ளை செய்ய ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் மீதான, 140 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,மோசடி குறித்து விசாரணை நடத்தும்படி, தமிழக மின் உற்பத்தி கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில், 'பிடி பாரா தயா எனர்ஜி' என்ற நிறுவனம் ஈடுபடுகிறது. இந்தோனேஷியாவில் உள்ள இந்த நிறுவனத்துக்கு, துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 'பிடி பாரா தயா எனர்ஜி இந்தியா' என்ற துணை நிறுவனம் உள்ளது.

இந்த துணை நிறுவனம், கடந்தாண்டு ஜூலை 22ல், தமிழக மின் உற்பத்தி கழகத்துக்கு நிலக்கரி வினியோகம் செய்வது தொடர்பான டெண்டரில் பங்கேற்றது.

ஏலத்தில் பங்கேற்க தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, கடந்தாண்டு நவ., 15ல் இந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை, தமிழக மின் உற்பத்தி கழகம் நிராகரித்தது.

இதையடுத்து, டெண்டர் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'பிடி பாரா தயா எனர்ஜி இந்தியா' வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தள்ளு படி செய்தார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்விசாரணைக்கு வந்தது.

நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள், ஏ.எல்.சோமையாஜி,அப்துல் சலீம் ஆஜராகி வாதாடியதாவது:

மூன்று ஆண்டுகளுக்கான நிலக்கரி ஒப்பந்தத்தில், ஓராண்டுக்கு எவ்வளவு நிலக்கரி வழங்க வேண்டும் என்று கூறாமல் வெளியிடப்பட்டுள்ள, இந்த டெண்டரைஏற்க முடியாது.

இதனால், அரசுக்கு தான் இழப்பு ஏற்படும். எப்போதும் இல்லாமல் மூன்று நிறுவனங்களை டெண்டரில் பங்கேற்க செய்ததன் வாயிலாக, மனுதாரர் நிறுவனம் வெளியேற்றப்பட்டு உள்ளது.

ஏலத்தில், 'அதானி, ஸ்மார்ட் ஜென்' நிறுவனங்கள் உள்ளே வந்துள்ளன. இதில், ஸ்மார்ட் ஜென் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை பெற்ற இந்நிறுவனம், 140 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., மோசடியை மறைத்து, இந்த டெண்டரை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர்கள் வாதாடினர்.

தமிழக மின் உற்பத்தி கழகம் தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி,''ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் மீதான மோசடி புகார் குறித்து, ஏற்கனவே கவனிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் ஒப்பந்த காலம் ஒன்பது மாதமாக குறைக்கப்பட்டுஉள்ளது,'' என்றார்.

இதையடுத்து, 'தமிழக மின் உற்பத்தி கழகம், இந்த மோசடி தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கில் விரிவான வாதம் தேவை' என தெரிவித்த நீதிபதிகள், ஒப்பந்தம் பெற்ற ஸ்மார்ட் ஜென் நிறுவனத்தை, எதிர்மனுதாரராக வழக்கில் இணைக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.






      Dinamalar
      Follow us