sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை

/

21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை

21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை

21 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை

3


UPDATED : மே 18, 2024 06:04 AM

ADDED : மே 18, 2024 05:57 AM

Google News

UPDATED : மே 18, 2024 06:04 AM ADDED : மே 18, 2024 05:57 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட, 21 மாவட்டங்களில், இன்னும் நான்கு நாட்கள் கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:

தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

இன்று: தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் கனமழை.

நாளை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. நீலகிரி, கோவை, திருப்பூர், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை

இதேபோல், வரும், 20, 21ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிக கனமழையும், மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை முதல் 21ம் தேதி வரை மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-






      Dinamalar
      Follow us