sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வளிமண்டல சுழற்சி நகர்வால் 14 மாவட்டங்களில் கனமழை

/

வளிமண்டல சுழற்சி நகர்வால் 14 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல சுழற்சி நகர்வால் 14 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல சுழற்சி நகர்வால் 14 மாவட்டங்களில் கனமழை


ADDED : ஆக 15, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 15, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பகுதிகளின் மீது நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நகரத் துவங்கியுள்ள நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் மட்டும் காணப்படுகிறது.

இது, கிழக்கில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால், மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகர வாய்ப்பு உள்ளது.

இதே சமயத்தில், கேரள கடலோர பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி, லட்சத்தீவு - மாலத்தீவு இடையே செல்ல வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரள பகுதிகளில் கனமழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலுார்.

விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆக., 17, 18லும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தமிழக தென்கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில், ஆக., 18 வரை மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us