ADDED : மார் 06, 2025 03:14 AM
மதுரை: ம.க.இ.க.,மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்கத்திற்கு எதிராக சில அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மார்ச் 25 ல் மத நல்லிணக்க கூட்டம் நடத்த அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
மார்ச் 9 ல் ஊர்வலம், மாநாடு நடத்த அனுமதிக்க மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.தனபால்: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை நிலவுகிறது. கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளது. இச்சூழலில் கூட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவிட்டார்.