உளவுத்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு
உளவுத்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு
ADDED : ஆக 02, 2024 05:09 AM

மதுரை: மதுரை வண்டியூர் ஹிந்து முன்னணி அலுவலகத்தில் அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக இருக்கிறது. கொலைகள் அதிகரித்து வருகிறது. அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
போதை கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர்சாதிக்கின் கூட்டாளி இப்ராஹிம் இரண்டு நாட்களுக்கு போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை கடத்தலில் ஆளுங்கட்சியினர் பிடிபடுகின்றனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மணிப்பூர் பகுதிகளில் இருந்து நிறைய போதை பொருட்கள் வருகிறது.
இதனை உளவுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
கோயில் இடங்களை மீட்பதாக சொல்கின்றனர். அதில் நிறைய ஊழல் நடக்கிறது. பழநி கிரிவல பாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். மக்கள் செல்லும் இடத்தில் கடை வைக்க இடம் ஒதுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தர தயாராக உள்ளோம். மற்ற மத விழாக்களில் கலந்து கொள்ளும் அவர் இதிலும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறோம். மத சார்பற்றவர் என்றால் அவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்றார்.
மாவட்ட தலைவர் அழகர்சாமி, கோட்ட செயலாளர் அரசபாண்டி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.