sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உளவுத்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு 

/

உளவுத்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு 

உளவுத்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு 

உளவுத்துறை எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் பேச்சு 

1


ADDED : ஆக 02, 2024 05:09 AM

Google News

ADDED : ஆக 02, 2024 05:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வண்டியூர் ஹிந்து முன்னணி அலுவலகத்தில் அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக இருக்கிறது. கொலைகள் அதிகரித்து வருகிறது. அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

போதை கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர்சாதிக்கின் கூட்டாளி இப்ராஹிம் இரண்டு நாட்களுக்கு போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை கடத்தலில் ஆளுங்கட்சியினர் பிடிபடுகின்றனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மணிப்பூர் பகுதிகளில் இருந்து நிறைய போதை பொருட்கள் வருகிறது.

இதனை உளவுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

கோயில் இடங்களை மீட்பதாக சொல்கின்றனர். அதில் நிறைய ஊழல் நடக்கிறது. பழநி கிரிவல பாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். மக்கள் செல்லும் இடத்தில் கடை வைக்க இடம் ஒதுக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தர தயாராக உள்ளோம். மற்ற மத விழாக்களில் கலந்து கொள்ளும் அவர் இதிலும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறோம். மத சார்பற்றவர் என்றால் அவர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்றார்.

மாவட்ட தலைவர் அழகர்சாமி, கோட்ட செயலாளர் அரசபாண்டி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us