sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிதம்பரத்தில் ஹோட்டல் தமிழ்நாடு ரூ.8 கோடியில் கட்டட பணி தீவிரம்

/

சிதம்பரத்தில் ஹோட்டல் தமிழ்நாடு ரூ.8 கோடியில் கட்டட பணி தீவிரம்

சிதம்பரத்தில் ஹோட்டல் தமிழ்நாடு ரூ.8 கோடியில் கட்டட பணி தீவிரம்

சிதம்பரத்தில் ஹோட்டல் தமிழ்நாடு ரூ.8 கோடியில் கட்டட பணி தீவிரம்


ADDED : பிப் 21, 2025 10:44 PM

Google News

ADDED : பிப் 21, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:சுற்றுலா நகரமான கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.

கன்னியாகுமரி போன்ற சுற்றுலா நகரங்களில் உள்ளது போல, சிதம்பரத்திலும் தமிழ்நாடு ஹோட்டல் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019ல், 10 கோடி ரூபாய் மதிப்பில், சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.

இதில், 24 அறைகள், ஹோட்டல் மற்றும் பாருடன் கூடிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

விறுவிறுப்பாக நடந்து வந்த பணிகள், கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டன.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால், அதே தொகையில் பணிகளை தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.

அதனால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஹோட்டல் கட்டுமான பணியை தொடர, 8 கோடி ரூபாய்க்கு புதிய டெண்டர் விடப்பட்டு, தற்போது பணிகள் துவங்கியுள்ளன.

எட்டு மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us