sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

/

மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது

மனைவியை குத்தி கொன்ற கணவர் கைது


ADDED : செப் 07, 2024 12:22 AM

Google News

ADDED : செப் 07, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்.

நீலகிரி மாவட்டம் எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் மோகன், 46,விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷோபா, 38,என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

ஷோபா ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட்டதால்,எல்க்ஹில் வீட்டில் தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

நேற்றிரவு, 7:00 மணியளவில் மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோகன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தில் குத்தினார். ஷோபா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஊட்டி பி 1 போலீஸ் ஸ்டேஷனில் மோகன் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னையில் கணவர், மனைவியை கொலை செய்த விவகாரம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us