sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவர் நல திட்டங்கள் 'வாட்ஸாப்' வாயிலாக பெற்றோருக்கு தகவல்

/

மாணவர் நல திட்டங்கள் 'வாட்ஸாப்' வாயிலாக பெற்றோருக்கு தகவல்

மாணவர் நல திட்டங்கள் 'வாட்ஸாப்' வாயிலாக பெற்றோருக்கு தகவல்

மாணவர் நல திட்டங்கள் 'வாட்ஸாப்' வாயிலாக பெற்றோருக்கு தகவல்


ADDED : மே 19, 2024 12:45 AM

Google News

ADDED : மே 19, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த விபரங்களை, மாணவர்களின் பெற்றோருக்கு, அவர்களின் மொபைல் போன், 'வாட்ஸாப்' வாயிலாக தெரிவிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்றி பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் மொபைல் போன் எண்களை பெற வேண்டும்.

இதுவரை, 35 லட்சம் மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

தலைமை ஆசிரியர்கள் துணையுடன், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு, நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்க வேண்டும்.

பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு,ஓ.டி.பி., அனுப்பப்படும்விபரத்தை, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, இப்பணியை செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us