sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வேலியே பயிரை மேய்வது தமிழகத்தின் சாபக்கேடு!'

/

'வேலியே பயிரை மேய்வது தமிழகத்தின் சாபக்கேடு!'

'வேலியே பயிரை மேய்வது தமிழகத்தின் சாபக்கேடு!'

'வேலியே பயிரை மேய்வது தமிழகத்தின் சாபக்கேடு!'

5


ADDED : ஏப் 28, 2024 01:41 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 01:41 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வேலியே பயிரை மேய்வது போல, போதைப்பொருட்கள் நடமாட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், வெளி மாநிலங்களில் இருந்து, 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக, தி.மு.க.,வின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் கைது செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்வது போல, போதைப்பொருட்கள் நடமாட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.

கடந்த பழனிசாமி ஆட்சியில், குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி, சட்டசபைக்கே குட்காவை எடுத்து சென்று குற்றம் சாட்டியவர் ஸ்டாலின். அவர் முதல்வரான பின், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை.

தி.மு.க., நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் வழியாக, ஆளுங்கட்சி ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us