sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தறிகெட்டு ஓடிய ஜீப்: மூவர் பலி

/

தறிகெட்டு ஓடிய ஜீப்: மூவர் பலி

தறிகெட்டு ஓடிய ஜீப்: மூவர் பலி

தறிகெட்டு ஓடிய ஜீப்: மூவர் பலி


ADDED : ஜூன் 10, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஜீப் தறி கேட்டு ஓடியதில் நின்று கொண்டிருந்த மூவர் பலியாயினர்.

திருச்சுழி அருகே மண்டபசாலை பஸ் ஸ்டாப் அருகே உள்ள டீக்கடையில் மக்கள் நேற்று மாலை 5:30 மணிக்கு டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை- வாலிநோக்கம் நெடுஞ்சாலையில் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு ஜீப் சென்றது.

திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி நின்ற மக்கள் மீது மோதியதில் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து 54, விவசாயி விஜயராமன் 53, துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

மூக்கையா 50, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாறுமாறாக ஓடிய ஜீப் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்தது. தகவல் அறிந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us