UPDATED : ஏப் 07, 2024 08:43 PM
ADDED : ஏப் 07, 2024 07:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சிதொகுதியில் பரப்புரை செய்ய வந்த பா.ஜ.வின் தேசிய தலைவர் ஜெ.பி.,நட்டாவின் ரோடு ஷோ நடைபெற்றது.
திருச்சி தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜெ.பி.,நட்டா திருச்சி வந்துள்ளார். தொடர்ந்து திருச்சி சாலை ரோடு பகுதியில் இருந்து உறையூர் நாச்சியார் கோவில் வரையில் நடைபெறும் 'ரோடு ஷோ' வில் நட்டா பங்கேற்றார்.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை நட்டாவின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 7.30 மணி அளவில் ரோடு ஷோவை தொடங்கினார் நட்டா. பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜகவினர் முழக்கம் எழுப்பியபடி நடந்து சென்றனர். உறையூர் நாச்சியார் கோவில் வரை இந்த ரோடு ஷோ நடைபெற்றது.

