sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணாநிதி நுாற்றாண்டு புகைப்பட கண்காட்சி

/

கருணாநிதி நுாற்றாண்டு புகைப்பட கண்காட்சி

கருணாநிதி நுாற்றாண்டு புகைப்பட கண்காட்சி

கருணாநிதி நுாற்றாண்டு புகைப்பட கண்காட்சி


ADDED : மே 30, 2024 10:42 PM

Google News

ADDED : மே 30, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று திறந்து வைத்தார்.

புகைப்பட கண்காட்சியில், 1934 முதல் 2024ம் ஆண்டு வரை, அதாவது, கருணாநிதி தன் மாணவப் பருவம் முதல் அரசியல் வாழ்வில் இறுதி வரை பயணித்த, பல்வேறு நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஈ.வெ.ரா., காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இக்கண்காட்சியை டி.ஆர்.பாலு நேற்று திறந்து வைத்தார். அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பராதி, தலைமை நிலைய செயலர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உட்பட பலர் பங்கேற்றனர். கருணாநிதி உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

கண்காட்சியை, வரும் 3ம் தேதி வரை காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பொது மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தி.மு.க., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us