கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் ரயில் பாதையில் 'கவச்' பாதுகாப்பு
கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் ரயில் பாதையில் 'கவச்' பாதுகாப்பு
ADDED : ஏப் 29, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில், : கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில், 'கவச்' பாதுகாப்பு செயல்படுத்தப்படவுள்ளது.
ஒரே பாதையில் வரும் இரண்டு ரயில்கள், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்கான அமைப்பு 'கவச்' என அழைக்கப்படுகிறது. தானியங்கி ரயில் பாதுகாப்பு என அழைக்கப்படும் இது, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், 2022ல் உருவாக்கப்பட்டது.
ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்தால், ரயில்களின் பிரேக்கிங் சிஸ்டம் தானாக செயல்பட்டு, ரயில்களை நிறுத்தி விடும். ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் செயல்படும்.
இந்த வசதி கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே அமைக்கப்பட்டுள்ள, 86.54 கி.மீ., ரயில் பாதையில், செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 1 கி.மீ.,க்கு 50 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.

