sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

/

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளிக்கு ஆயுள் சிறை


ADDED : ஜூன் 25, 2024 01:49 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த கார்மெண்ட்ஸ் தொழிலாளிக்கு ஆயுட்காலம் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் தாலுகா சோலைசேரியை சேர்ந்த அழகு சோலைமலை 39, கார்மெண்ட்ஸ் தொழிலாளி. இவர் 2021ல் பெற்றோர் இல்லாத 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்தார். சேத்துார் ரூரல் போலீசார் அழகு சோலைமலையை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அழகு சோலைமலைக்கு ஆயுட்காலம் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us