sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி ஆக., 2வது வாரத்தில் நடக்கிறது

/

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி ஆக., 2வது வாரத்தில் நடக்கிறது

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி ஆக., 2வது வாரத்தில் நடக்கிறது

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி ஆக., 2வது வாரத்தில் நடக்கிறது


ADDED : ஜூலை 24, 2024 10:40 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி, சென்னை சாலையில், பெத்தனப்பள்ளி பஞ்.,ல் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மைதானத்தில் ஆக., 2வது வாரத்தில் நடக்கவுள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது.

கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., நேற்று அரங்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசு துறையின், 50 அரங்குகள், மேடைகள் அமைக்கும் பணி, 30 சதவீதம் முடிந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள், 80 தனியார் கடைகள், உள்ளிட்டவைகளுக்கு வரும், 29ல் டெண்டர் விடப்படும். தேசிய நெடுஞ்சாலையோரம் கண்காட்சி நடக்க உள்ளதால், போக்குவரத்திற்கு பாதிப்பின்றி பொதுமக்கள் வந்து செல்ல தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு, அவர் கூறினார்.

மா சீசன் முடிந்த பின் நடக்க போகும் மாங்கனி கண்காட்சி யாருக்கும் பயனில்லை என, விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us