ADDED : மார் 06, 2025 07:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தமிழகத்திற்கு தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 1967, மார்ச் 7ம் தேதி அன்று, தமிழகத்தின் முதல்வராக அண்ணாதுரை பதவியேற்றார். அதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:
கடந்த 1967: அண்ணாதுரை அமர்ந்தார்; தமிழகம் எழுந்தது. தலைநிமிர்ந்த தமிழகத்திற்கு தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்; வேங்கையெனச் சீறிடுவோம்; வெற்றி வாகை தனைச் சூடிடுவோம். தமிழ் வாழ்க.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.