15 டன் ரேஷன் அரிசி கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
15 டன் ரேஷன் அரிசி கடத்தல் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
ADDED : செப் 03, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: கேரளாவுக்கு கோழி இறைச்சி கொண்டு சென்ற லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் தப்பி ஓடினார்.
தென்காசி அருகே ஆசாத் நகரில் குற்றாலம் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். மதுரை பதிவெண் கொண்ட ஒரு லாரியில் கோழி இறைச்சிகள் இருந்தன.
போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் அதன் உட்பகுதியில் 300 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அரிசி மூட்டைகளை குற்றாலம் கலைவாணர் அரங்கில் வைத்தனர்.