sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை எய்ம்ஸ் செங்கலை பார்லி.,யில் காட்ட வேண்டியது தானே : திருச்சியில் பழனிசாமி கேள்வி

/

மதுரை எய்ம்ஸ் செங்கலை பார்லி.,யில் காட்ட வேண்டியது தானே : திருச்சியில் பழனிசாமி கேள்வி

மதுரை எய்ம்ஸ் செங்கலை பார்லி.,யில் காட்ட வேண்டியது தானே : திருச்சியில் பழனிசாமி கேள்வி

மதுரை எய்ம்ஸ் செங்கலை பார்லி.,யில் காட்ட வேண்டியது தானே : திருச்சியில் பழனிசாமி கேள்வி

2


UPDATED : மார் 24, 2024 09:10 PM

ADDED : மார் 24, 2024 07:25 PM

Google News

UPDATED : மார் 24, 2024 09:10 PM ADDED : மார் 24, 2024 07:25 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் செங்கலை காட்டியவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று காட்டி இருக்க வேண்டியது தானே என திருச்சியில் நடைபெற்ற அ.திமுக. பிரசார பொதுகூட்டத்தில் அதன் பொது செயலாளர் பழனிசாமி கூறினார்.

விரைவில் நடைபெற உள்ள பார்லி., பொது தேர்தலில் அதிமுக 32 இடங்களிலும் தேமுதிக 5 இடங்களிலும் பிற கூட்டணி கட்சியினர் இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.

Image 1248780


இந்நிலையில் அதிமுக பிரசார பொது கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் நடந்த பொது கூட்ட மேடையில் ஒரே நேரத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொது செயலாளர் இடைப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

Image 1248781


தொடர்ந்து பேசிய பழனிசாமி தேனீக்களை போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தலில் 3 கூட்டணியினர் போட்டியிட்டாலும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி.4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை வழங்கியது அதிமுக அரசு. பிரதமர் குறித்தும் என்னைப்பற்றி மட்டுமே முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். தமிழக மக்களுக்கு 3 ஆண்டுகளில் திமுக அரசு என்ன செய்தது? அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 10 மருத்துவகல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவககல்லூரியாவது துவங்கியது உண்டா.

பா.ஜ.,வைத் தொடாத இ.பி.எஸ்.,


திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, தி.மு.க.,வை கடுமையாக சாடினார். ஆனால், பா.ஜ.,வுக்கு எதிராக சிறு விமர்சனத்தைக் கூட வைக்கவில்லை. தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் கள்ள உறவு என்று மட்டும் ஒரு முறை சொன்ன அவர், பா.ஜ.,வுக்கு எதிராக நேரடியாக பேசவில்லை.

ஸ்கிரிப்ட மாத்தப்பா உதயநிதி!


மூன்று ஆண்டுகளாக எய்ம்ஸ் செங்கல்லை தூக்கி வீதிகளில் காட்டி கொண்டிருக்கிறார் உதயநிதி. ஸ்கிரிப்ட மாத்துப்பா உதயநிதி. கதைய மாத்து. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அதற்கு துணிவு திராணி இல்லாமல், இங்க வித்தை காட்டிக் கொண்டிருக்கிறீர்களா? 38 எம்பிக்கள் 5 ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us