sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிக வட்டி தருவதாக 10 கோடி மோசடி; மதுரை நபர் குடும்பத்துடன் கைது

/

அதிக வட்டி தருவதாக 10 கோடி மோசடி; மதுரை நபர் குடும்பத்துடன் கைது

அதிக வட்டி தருவதாக 10 கோடி மோசடி; மதுரை நபர் குடும்பத்துடன் கைது

அதிக வட்டி தருவதாக 10 கோடி மோசடி; மதுரை நபர் குடும்பத்துடன் கைது


ADDED : செப் 11, 2024 05:22 AM

Google News

ADDED : செப் 11, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மதுரையை சேர்ந்தவர் முத்தையன், 48. இவர், திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் குடும்பத்துடன் தங்கி, பி.என்., ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக விளம்பரம் செய்தார்.

இதை நம்பி, 2018 முதல், பலரும் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி வட்டியுடன் பணம் கொடுக்காமல், காலம் கடத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில், குடும்பத்துடன் தலைமறைவானார்.

பணத்தை செலுத்தி ஏமாந்தவர்கள், திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., முருகானந்தம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 200க்கும் மேற்பட்டோரிடம், 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

முத்தையன், அவரது மனைவி மஞ்சு, 47, மகன் கிரண்குமார், 22, உட்பட, ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில், முத்தையன், அவரது மனைவி, மகன் என, மூவரையும் கைது செய்து, இரண்டு கார்கள் மற்றும் 8.5 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us