sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா:முதல் நாள்

/

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா:முதல் நாள்

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா:முதல் நாள்

மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா:முதல் நாள்


ADDED : ஏப் 11, 2024 06:29 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 06:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும் பவனி வருகின்றனர்.படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைப் புரிகிறார் கடவுள். இதில் கற்பக மரம் படைத்தல் தத்துவத்தைக் குறிப்பதாகும். மரத்திற்கு வேர் ஆதாரமாகவும், அதன் கிளைகள், இலைகள் எல்லாம் மேலே பரவி இருப்பது போல கடவுள் உலகிற்கு ஆதாரமாகவும், அவரைச் சார்ந்து 84 லட்சம் வகை உயிரினங்கள் எங்கும் பரவி இருக்கிறது. கேட்ட வரத்தைக் கொடுப்பதற்காக சுவாமி கற்பகவிருட்சத்தில் பவனி வருகிறார்.

விரும்பியதை அடைந்து விட்டால், மனதில் அகங்காரம், தற்பெருமை ஆகிய அசுர குணங்கள் உண்டாகி விடும். அதைப் போக்கி மனதை நல்வழியில் திருப்புவதற்காக மீனாட்சி சிம்ம வாகனத்தில் பவனி வருகிறாள். 'எல்லாம் கிடைத்து விட்டது என்று ஆணவம் கொள்ளாதே! கவனமாக இரு!' என்று சிங்கத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை செய்கிறாள். இந்த அரிய தத்துவத்தை உணர்ந்து அம்மையப்பரை தரிசித்து அருள் பெறுவோம்.






      Dinamalar
      Follow us