ADDED : பிப் 27, 2025 01:50 AM

வத்திராயிருப்பு,:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
மதியம் 12:00 மணியை கடந்தும் வந்தபடி இருந்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இரவு 8:00 மணி முதல் துவங்கி இன்று அதிகாலை 4:00 மணி வரை நான்கு கால மகா சிவராத்திரி வழிபாடு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மலையடிவாரத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வனத்துறை, போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.