sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாய்களை ஏவி பூனையை கொன்று 'இன்ஸ்டா'வில் பதிவிட்டவர் கைது

/

நாய்களை ஏவி பூனையை கொன்று 'இன்ஸ்டா'வில் பதிவிட்டவர் கைது

நாய்களை ஏவி பூனையை கொன்று 'இன்ஸ்டா'வில் பதிவிட்டவர் கைது

நாய்களை ஏவி பூனையை கொன்று 'இன்ஸ்டா'வில் பதிவிட்டவர் கைது


ADDED : ஏப் 02, 2024 02:07 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசிறி: நாய்களை விட்டு பூனையை கடித்து கொல்ல வைத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மேலதொட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 27. இவர், சில வாரங்களுக்கு முன், தான் பழக்கப்படுத்திய நாய்களுக்கு மத்தியில், வளர்ப்பு பூனையை விட்டு, அவற்றை கடிக்க நாய்களுக்கு உத்தரவிட்டார்.

அங்குள்ள ஐந்து நாய்களும் பூனையை கடித்து குதறியதில், அது துடிதுடித்து இறந்தது. இந்த கொடூரத்தை தன் மொபைல் போனில் பதிவு செய்த விஜயகுமார், அதை, 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ பரவி வருகிறது.

இதையடுத்து, கொடூர செயலில் ஈடுபட்ட விஜயகுமார் மீது, வாழவந்தி வி.ஏ.ஓ., சபாபதி, போலீசில் புகார் அளித்தார்.

ஜெம்புநாதபுரம் போலீசார், வாலிபர் விஜயகுமாரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், இதுபோல விலங்குகளை கொன்றுள்ளாரா என போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us