sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு முகமூடி ஆசாமிகள் துணிகரம்..

/

வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு முகமூடி ஆசாமிகள் துணிகரம்..

வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு முகமூடி ஆசாமிகள் துணிகரம்..

வீடு புகுந்து தாலி செயின் பறிப்பு முகமூடி ஆசாமிகள் துணிகரம்..


ADDED : ஆக 24, 2024 05:31 AM

Google News

ADDED : ஆக 24, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில் அருகே வீட்டில் துாங்கிய பெண்ணிடம் 8 சவரன் தாலி செயினை பறித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த நரசிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் இளவரசன் மனைவி சவுமியா,24; இவர் தனது கணவருடன், வானுார் அடுத்த ராவுத்தன்குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அறையில் சவுமியா மற்றும் அவரது கணவரும் துாங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 2:30 மணிக்கு, வீட்டினுல் புகுந்த முகமூடி ஆசாமிகள், சவுமியா கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்ட சவுமியா எழுந்து கூச்சலிட்டார். அதற்குள் முகமூடி ஆசாமிகள் அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் புகுந்து தலைமறைவாகினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, முகமூடி ஆசாமிகளை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us