ADDED : பிப் 21, 2025 09:00 PM

திண்டிவனம்:திண்டிவனம் வருகை தந்த முதல்வரின் வாகனத்தில், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.,வுமான மஸ்தான் படிக்கட்டில் தொங்கியபடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலுாரில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக காரில் சென்றார். அவருக்கு, திண்டிவனம் - மரக்காணம் கூட்ரோடு அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலர் மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களில் 'அப்பா' என்ற அடைமொழி அதிக அளவில் இடம் பெற்றிருந்தது. மேலும், இறையானுாரில், முதல்வர் வாகனம் கடந்த போது, பள்ளி குழந்தைகளை வைத்து, முதல்வரை 'அப்பா' என அழைக்க செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட செயலர் மஸ்தான் உற்சாக மிகுதியால், முதல்வரின் வாகனத்தின் பக்கவாட்டில் தொங்கியபடி பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

