ADDED : ஜூலை 18, 2024 01:49 AM
விண்ணப்பம் வரவேற்பு
* தமிழ்நாடு மாநில எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் தலைவர் பதவிக்கு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர், 75 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியானவர்கள், செயலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தலைமை செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு, ஆக., 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காப்பீடுக்கு அழைப்பு
* நடப்பு சாகுபடி பருவத்தில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நெல், பச்சை பயறு, உளுந்து, நிலக்கடலை, கம்பு ஆகியவற்றை காப்பீடு செய்ய, வரும் 31ம் தேதி கடைசி நாள். பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்களை, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய வங்கிகளுக்கு எடுத்து சென்று, விவசாயிகள் காப்பீடு செய்யும்படி வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

