ADDED : ஜூலை 25, 2024 12:42 AM
தமிழக சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் சட்டக் கல்லுாரி களில், 3 ஆண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, வரும், 31ம் தேதி வரை பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுகளில் பங்கேற்க வசதியாக, அரசு வேலை வாய்ப்பு பயிற்சித்துறை சார்பில், சென்னை, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ., காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், ஆக., 1 முதல், உணவு, தங்கும் விடுதி வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 29ம் தேதிக்குள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வாயிலாகவும், scdaplacement@gmail.com என்ற 'இ - மெயில்' முகவரி வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

