sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்டாயப்படுத்தி கையெழுத்து அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

/

கட்டாயப்படுத்தி கையெழுத்து அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

கட்டாயப்படுத்தி கையெழுத்து அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை

கட்டாயப்படுத்தி கையெழுத்து அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை


ADDED : மார் 07, 2025 09:05 PM

Google News

ADDED : மார் 07, 2025 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:''மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார்.

திருவள்ளூரில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தை பொறுத்தவரை, இரு மொழிக் கொள்கையே போதுமானது. அறிவு சார்ந்து, அறிவியல் சார்ந்து பேச வேண்டிய காலம் இது. உலகத் தரத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டிய காலம். மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் கொடுப்பதற்காக, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால், 2,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும்.

அந்த நிலை வேண்டாம் என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பள்ளி வாயிலில் 'போர்டு' வைத்து, குழந்தைகளை அழைத்து கையெழுத்து போடுமாறு வற்புறுத்துவதை கண்டிக்கிறேன். எல்லா வகையிலும் பா.ஜ., அரசு, 'பிளாக்மெயில்' செய்து வருவதை, நிறுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி கையெழுத்து கேட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us