sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெறிநாய் கடித்ததில் தாய், மகள் படுகாயம்

/

வெறிநாய் கடித்ததில் தாய், மகள் படுகாயம்

வெறிநாய் கடித்ததில் தாய், மகள் படுகாயம்

வெறிநாய் கடித்ததில் தாய், மகள் படுகாயம்


ADDED : ஜூன் 25, 2024 10:38 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரத் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி ஜோதி, 35. இவரின் இரட்டை பெண் குழந்தைகளில் மூத்த மகளான தன்யாஸ்ரீ, 4, வீட்டின் அருகே நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறி பிடித்த தெருநாய், தன்யாஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதை பார்த்த அவரது தாய் ஜோதி, நாயிடம் இருந்து மகளை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரையும் நாய் கடித்தது.

நாயை விரட்டியடித்து காயமடைந்த ஜோதி, அவரது மகள் தன்யாஸ்ரீ ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஓசூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால், வீட்டின் அருகே விளையாடும் குழந்தைகள், சாலைகளில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடித்து வருகின்றன. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us