திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாகலாந்து கவர்னர் தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாகலாந்து கவர்னர் தரிசனம்
ADDED : ஜூலை 11, 2024 07:49 PM

மயிலாடுதுறை:திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாகலாந்து மாநிலத்தின் கவர்னர் இல. கணேசன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும் உற்சவரராக கால சம்ஹார மூர்த்தியும் அருள் பாலித்து வருகிறார்கள். சிவன் எமனை காலல் எட்டி உதைத்த தளமான இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நாகலாந்து மாநிலத்தின் கவர்னர் இல. கணேசன் மற்றும் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக தருமபுரம் ஆதீன தம்பிரான் கட்டளை சாமிகள் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு வரவேற்பு அளித்தார். தொடர்ந்து கோ பூஜை, கஜ பூஜை செய்தார். பின்னர் நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்கார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

