sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள்: தேடும் பணியில் அதிரடிப்படை

/

தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள்: தேடும் பணியில் அதிரடிப்படை

தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள்: தேடும் பணியில் அதிரடிப்படை

தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள்: தேடும் பணியில் அதிரடிப்படை

4


ADDED : ஜூலை 28, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 01:19 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: தமிழக - கேரள எல்லை பகுதியான வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகளில், சில ஆண்டுகளாக நக்சல்கள் நடமாட்டம் தலை துாக்கியுள்ளது.

வனத்தில் முகாமிட்டு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவது, போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தும் செயலிலும் ஈடுபட்டு வந்துஉள்ளனர்.

நக்சல் நடமாட்டத்தை தடுக்க எல்லையோர பகுதிகளில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை, கர்நாடகாவில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் என, வனத்தில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் தேர்தல் சமயத்தில், வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில், தொழிலாளர்கள் மத்தியில் வந்து தேர்தலுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு சென்றனர்.

இந்நிலையில், நக்சல் மனோஜ் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வனத்திலிருந்து நச்சல்கள் மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் எர்ணாகுளம் பகுதியிலிருந்து ரயில் வாயிலாக கோவை, ஈரோடு பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது வயநாடு பகுதியில் நக்சல் ஆதரவாளர்களுடன் தங்கி இருக்கலாம் என்றார்.

இதையடுத்து, மாநில அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us