sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினார் நாகேந்திரன் வக்கீல் ஆஜர்

/

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினார் நாகேந்திரன் வக்கீல் ஆஜர்

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினார் நாகேந்திரன் வக்கீல் ஆஜர்

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினார் நாகேந்திரன் வக்கீல் ஆஜர்


ADDED : ஏப் 23, 2024 12:34 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தாம்பரத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில், நயினார் நாகேந்திரன் வழக்கறிஞர், தாம்பரம் காவல் நிலையத்தில் நேற்று ஆஜராகி, 10 நாட்கள் அவகாசம் கோரி கடிதம் கொடுத்தார்.

சென்னையில் இருந்து ஏப்., 6ம் தேதி, திருநெல்வேலிக்கு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், கட்டுக்கட்டாக பணம் கடத்தப்படுவதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

ேஹாட்டலில் இருந்து


இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலில், பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி, சென்னையை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் இருந்து, 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்த பணம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, நெல்லை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ேஹாட்டலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சதீஷ் மற்றும் நவீன் ஆகியோர், அந்த ஹோட்டல் ஊழியர்கள். பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் எனவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த பணம், நெல்லையில் ஒருவரிடம் ஒப்படைக்க இருந்ததாகவும், வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சென்னை மற்றும் நெல்லையில், நயினார் நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையும் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை பசுமை வழிச்சாலையைச் சேர்ந்த கோவர்த்தன் என்பவருக்கு, போலீசார் சம்மன் அனுப்பினர். அவரது மகன் கிேஷார், ஏப்., 14ம் தேதி, தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

ஒப்படைப்பு


அதேபோல், இந்த பணம் விவகாரம் தொடர்பாக, நயினார் நாகேந்திரன் நேற்று ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர், நேற்று ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரது வழக்கறிஞர், ஜெய்கர் டேவிட் என்பவர் ஆஜராகி, நயினார் நாகேந்திரன் சொந்த காரணங்களுக்காக ஆஜராக முடியவில்லை எனக் கூறி, 10 நாட்கள் அவகாசம் கோரி, தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளியிடம் கடிதம் கொடுத்தார்.

தாம்பரம் கருவூலத்தில் இருந்த, 4 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us