UPDATED : செப் 04, 2024 07:09 PM
ADDED : செப் 04, 2024 06:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கப்பற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்கள் எல்லைப்பகுதியை தாண்டி நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்ததாக கூறி இலங்கை கப்பற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்குப்பின் மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிடம் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மீனவர் ஒருவருக்கு உடல் நலம் குன்றியதை அடுத்து 5 மீனவர்கள் மற்றும் படகு ஒன்றையும் விடுவித்து உள்ளனர் இலங்கை கப்பற்படையினர்.