தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/  பள்ளி சீருடை 'அளவு' பிரச்னை இனி இருக்காது

 பள்ளி சீருடை 'அளவு' பிரச்னை இனி இருக்காது

 பள்ளி சீருடை 'அளவு' பிரச்னை இனி இருக்காது


ADDED : ஏப் 29, 2024 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரும் கல்வியாண்டில், குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து, மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை முன்மாதிரி திட்டமாகக் கொண்டு வர கல்வித்துறை ஆலோசித்துள்ளது.

பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்து, பள்ளி அளவில் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினர் மற்றும் உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த டெய்லர்களை தேர்ந்தெடுத்து, சீருடை தைத்து வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை மாணவ - மாணவியருக்கு சீருடைகள் தைக்கப்படுகின்றன. அளவெடுத்து தைப்பதற்கு தேவையான துணியின் விபரங்களை தலைமையாசிரியர்கள் சேகரித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், டெய்லர்களுக்கு மவுசு கூடும் வாய்ப்பு உள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us