ADDED : ஆக 24, 2024 11:09 PM
கோவை:கோவை விமான நிலையத்தில், புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி:
தமிழகம் ஆன்மிக பூமி தான். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மிகம் பேசினாலும் அரசியல் செய்ய முடியாது என்பதை முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.
ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற யுக்தியை செய்துள்ளனர். சிறுபான்மையினர் மாநாடு இதுபோன்று நடந்தால், முதல்வர் சென்று துவக்கி வைப்பாரா, மாட்டாரா என்பது தான் கேள்வி.
அண்ணாதுரையின் தமிழைப் பின்பற்றியவர்கள், ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தபோது, கூட்டணி இருந்தது என்றாலும், தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதெல்லாம், நாணய விழாவோடு போய் விட்டது. முருகனை எதிர்த்தவர்கள் மாநாடு நடத்த வேண்டியுள்ளது. 'ஒன்றிய அரசு' என்றவர்கள், 'மத்திய அரசு' என சொல்ல வேண்டிய நிலை வந்தது.
தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். முருகனை பிடிக்காவிட்டால், 2026 மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி விடும் என நினைக்கின்றனர்; முருகன் மாநாடு நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர்தெரிவித்தார்.

