sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பதவியும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: புலம்பும் புள்ளியியல் துறை அலுவலர்கள்

/

பதவியும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: புலம்பும் புள்ளியியல் துறை அலுவலர்கள்

பதவியும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: புலம்பும் புள்ளியியல் துறை அலுவலர்கள்

பதவியும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: புலம்பும் புள்ளியியல் துறை அலுவலர்கள்

1


ADDED : ஆக 22, 2024 04:45 AM

Google News

ADDED : ஆக 22, 2024 04:45 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையில், மூன்று ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பதவி உயர்வு பெறுவதற்கான, 20 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 52 கண்காணிப்பாளர்களை நீக்க முயற்சி நடந்து வருவதாக புள்ளியியல் துறை அலுவலர்கள் புலம்புகின்றனர்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கீழ் உள்ள இத்துறையில், நிர்வாக குளறுபடி காரணமாக, காலி பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. 30 உதவி இயக்குநர்கள், 13 துணை இயக்குநர்கள், 3 இணை இயக்குநர்கள், ஒரு கூடுதல் இயக்குநர் பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன.

இப்பணியிடங்களுக்கு சர்வீஸ் அடிப்படையில், பதவி உயர்வு அளிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைமை அலுவலகத்தில் உள்ள சிலர், தங்கள் செல்வாக்கு, அரசியல் பின்புலத்தால் முட்டுக்கட்டை போட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊழியர்கள் கூறியதாவது:



வாரிசு அடிப்படையில் பணியில் சேர்ந்த சிலர், ஜாதி ரீதியாக தலைமை அலுவலகத்தில், மற்றவர்களை இயக்கி வருகின்றனர். முறையாக அரசு தேர்வு எழுதி பதவிக்கு வந்தவர்களுக்கு, கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வாரிசு வேலையில் சேர்ந்த சிலர், எந்த தகுதியும் இல்லாமல் பதவி உயர்வு பெற முயற்சித்தனர். அதை, அரசு நிராகரித்து விட்டது. அந்த ஆத்திரத்தில், 20 உதவி இயக்குநர்களின் பணியிடங்களை இல்லாமலேயே செய்து விட்டனர்.

பதவி உயர்வையும், ரத்தான பணியிடங்களையும் மீண்டும் கொண்டு வர அரசு முயற்சிக்கக் கூடாது என்பதற்காக, சிலரை துாண்டி விட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர செய்தனர். இதனால், மூன்று ஆண்டுகளாக, எந்த பதவி உயர்வும் கிடைக்கவில்லை. ரத்தான பணியிடங்களால் கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.

தற்போது கண்காணிப்பாளர் பதவியை குறி வைத்துள்ளனர். அதற்கும் அவர்களுக்கு கல்வித் தகுதி இல்லை. இதனால், நிர்வாக வசதிக்காக என்று கூறி, 52 கண்காணிப்பாளர் பதவியை நீக்க வாய்ப்புள்ளது.

இதெல்லாம் துறை அமைச்சர், செயலர் கவனத்திற்கு சென்றதாக தெரியவில்லை. பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெற்றுவிடுவோமோ என, மன அழுத்தத்தில் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது?


புள்ளியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஜூன்26ல் நடத்த அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த கவுன்சிலிங்கின் போது விண்ணப்ப தேதி அடிப்படையில் சீனியாரிட்டி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. இது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டு பணியேற்பு சீனியாரிட்டி என அறிவிக்கப்பட்டு இதற்கான சீனியாரிட்டி பட்டியல் சில நாட்களுக்கு முன்பே அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பட்டியலின் படி கவுன்சலிங்கை எதிர்பார்த்து அலுவலர்கள் சென்னை சென்ற நிலையில் முதல்நாள் இரவோடு இரவாக சீனியாரிட்டி பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டது.
கவுன்சிலிங் துவங்கும் போது சீனியாரிட்டி மாற்றப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்பு அறிவித்த சீனியாரிட்டி பட்டியல் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தக்கோரி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கவுன்சிலிங் ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேதி பின் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பின் 2 மாதங்களாகியும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவித்த சீனியாரிட்டி மற்றும் அதன் பின் உருவான காலியிடங்கள் அடிப்படையில் உடனடியாக கவுன்சிலிங் தேதியை அறிவிக்க வேண்டும் என புள்ளிஇயல் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us