sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ம.தி.மு.க.,வில் 'சீட்' இல்லை: எம்.பி., தற்கொலை முயற்சி

/

ம.தி.மு.க.,வில் 'சீட்' இல்லை: எம்.பி., தற்கொலை முயற்சி

ம.தி.மு.க.,வில் 'சீட்' இல்லை: எம்.பி., தற்கொலை முயற்சி

ம.தி.மு.க.,வில் 'சீட்' இல்லை: எம்.பி., தற்கொலை முயற்சி

1


ADDED : மார் 25, 2024 05:30 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரியார் நகரில் வசிப்பவர் எம்.பி., கணேசமூர்த்தி, 77; ம.தி.மு.க., பொருளாளர். கடந்த 1998ல் பழனி, 2009 மற்றும் 2019ல் ஈரோடு லோக்சபா தொகுதியில் வென்று எம்.பி.,யானார். இம்முறையும் ஈரோடு தொகுதியில் போட்டியிட முயன்று வந்த நிலையில், ஈரோடு தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு பெரியார் நகரில் உள்ள தன் வீட்டில் நேற்று காலை 9:30 மணிக்கு எம்.பி., கணேசமூர்த்தி, சில மாத்திரைகள் சாப்பிட்டு, உடல் நலம் குன்றி உள்ளதாக மகன் கபிலனிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

'கணேசமூர்த்தி நான்கு முதல் ஐந்து பூச்சிக்கொல்லி மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். இவை அதிக விஷத்தன்மை கொண்ட மாத்திரைகள்' என டாக்டர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எம்.பி., தற்கொலைக்கு முயன்ற தகவல் பரவியதால், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார்.

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ நேற்று மருத்துவமனை சென்றார். கணேசமூர்த்தியின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.

தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கூறியதாவது:

ஈரோடு தொகுதியை தனக்கு அல்லது வேறு தொகுதியாக இருந்தால் கட்சிக்காக உழைத்து, சிறை சென்றவர்களுக்கு வாய்ப்பு தர வைகோவிடம், கணேசமூர்த்தி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், திருச்சி தொகுதி வேட்பாளராக வைகோவின் மகன் அறிவிக்கப்பட்டார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கணேசமூர்த்தி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us