sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : மார் 23, 2024 09:41 PM

Google News

ADDED : மார் 23, 2024 09:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 24, 1905

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில், சுப்பிரமணிய அய்யர் - மீனாட்சி தம்பதியின் மகனாக, 1905ல் இதே நாளில் பிறந்தவர் பி.எஸ்.ராமய்யா. ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர், குடும்ப வறுமையால் பல ஊர்களில் பல்வேறு வேலைகளை செய்தார்.

காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, சிறை சென்றார். சிறையில் முன்னணி போராளிகளுடன் பழகினார். கதராடை விற்பனை, ஓரணா புத்தக விற்பனைகளில் ஈடுபட்டார். இவர் எழுதிய, 'மலரும் மணமும்' சிறுகதை ஆனந்த விகடனில் வெளியானது. 'ஜயபாரதி' இதழில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். 'மணிக்கொடி' இதழுக்கு விளம்பர பிரதிநிதியாக இருந்ததுடன், ஆசிரியராகவும் மாறினார்.

'மணிக்கொடி காலம்' என்ற இலக்கிய வரலாற்று நுாலை எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்றார். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்களை எழுதினார்.

இவரது, 'பிரசிடென்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள்' நாடகங்கள் திரைப்படங்களாகின. பரஞ்சோதி, பூலோக ரம்பை, பக்த நாரதர், தேவதாசி கதை உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய இவர், 1983, மே 18ல் தன் 78வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us