sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஏப் 03, 2024 09:53 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 4, 1911

சென்னை, பூந்தமல்லிக்கு அருகில் உள்ள காரம்பாக்கத்தில், கிருஷ்ணய்யர் - வேங்கடசுப்பம்மாள் தம்பதியின் மகனாக, 1911ல் இதே நாளில் பிறந்தவர் கா.ம.வேங்கடராமையா.

இவர், சென்னை லயோலா கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்து, செங்கல்பட்டில் ஆசிரியராக பணியாற்றினார். இவரின் தாய்மொழி தெலுங்காக இருந்தும், தமிழில் பி.ஓ.எல்., ஆங்கிலத்தில் முதுகலை படிப்புகளை முடித்து, திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ் கல்லுாரியில் முதல்வராக பணியாற்றினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலையின் அரிய கையெழுத்து சுவடி புலத்தின் தலைவர், 'குமரகுருபரர்' இதழின் நிர்வாகியாகவும் இருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாறு, சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

'தஞ்சை மராட்டிய மன்னர்கள் வரலாறு, கந்தபுராணம்' உள்ளிட்ட நுால்களை பதிப்பித்த இவர், தன் 83வது வயதில், 1994, ஜனவரி 31ல் மறைந்தார்.

வைணவராக பிறந்து சைவத்தை ஆராய்ந்த, 'செந்தமிழ் கலாநிதி' பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us