sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

/

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி


ADDED : ஏப் 02, 2024 02:06 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை தாக்கி, ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் பலியானார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியை சேர்ந்தவர் நெருப்பூரான் மாதையன், 55; இவருக்கு, 3 மகன்கள். ஆடு மேய்கும் தொழில் செய்து வந்த இவர், நேற்று மாலை, 4:00 மணியளவில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தொட்டியின் பின்புறமுள்ள பெரியபள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த காட்டு யானை, அவரை மிதித்து கொன்றது. பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால், அவரது சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதுபோல, அடிக்கடி தமிழகம் - கர்நாடகா எல்லையோர கிராமங்களில் யானைகளில் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இந்த கோடை காலத்தில் யானைகள் ஊருக்குள் புகுவதால், அப்பாவி கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us